search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நபார்டு வங்கி"

    • நபார்டு வங்கி நிதி உதவி திட்டத்தின் கீழ் நடைபெற்றது
    • அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்

    கன்னியாகுமரி :

    கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 2023-

    2024-ம் நிதி ஆண்டுக்கான நபார்டு வங்கி நிதி உதவி திட்டத்தின் கீழ் கொட்டா ரம், மயிலாடி, பறக்கை ஆகிய 3 இடங்களில் உள்ள கால்நடை மருத்து வமனைகளில் ரூ.1 கோடியே 5 லட்சம் செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. இந்த புதிய கட்டிடங் களின் திறப்பு விழா கொட்டாரம் கால்நடை மருத்துவமனையில் நடந்தது. கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் பூதலிங்கம் தலைமை தாங்கி னார். நாகர்கோவில் உதவி இயக்குனர் டாக்டர் நோபிள், நோய் புலனாய்வுத்துறை உதவி இயக்குனர் டாக்டர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொட்டாரம் கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் சீனிவாசன் வரவேற்று பேசினார்.

    அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு புதிய கால்நடை மருத்துவமனை கட்டிடங்களை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், மாநில தி.மு.க.வர்த்தகர் அணி இணை செயலாளர் தாமரைபாரதி, அகஸ்தீஸ்வ ரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் அழகேசன், கொட்டாரம் பேரூர்தி.மு.க. செயலாளர் வைகுண்ட பெருமாள், தக்கலை கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்கு னர் டாக்டர்எட்வர்ட் தாமஸ், கால்நடை பல்கலைக் கழக உதவிபேராசிரியர் டாக்டர் ஜெனசிஸ், பொதுப் பணித் துறை செயற்பொறி யாளர் வேலுசாமி, உதவி செயற் பொறியாளர் முருகேசன், உதவி பொறியாளர் மாரித் துரை, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வீரசோழன் ஆற்றின் குறுக்கே ஏற்கெனவே இருந்த பாலம் ஒரு பேருந்துக்கு மேல் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.
    • ரூ.2 கோடியே 3.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பணிகளை தொடக்கி வைத்தார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா உத்திரங்குடி - இலுப்பூர் ஊராட்சிகளை இணைக்கும் மேமாத்தூர்- சங்கரன்பந்தல் மார்க்கத்தில் வீரசோழன் ஆற்றின் குறுக்கே ஏற்கெனவே இருந்த பாலம் ஒரு பேருந்துக்கு மேல் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.

    இதனால் அந்த பாலத்தை பயன்படுத்தி வந்த பல கிராமமக்கள் புதிய பாலம் கட்டிதர வேண்டி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க. செயலாளரும், பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ. வுமான நிவேதா முருகன் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அங்கே நபார்டு வங்கி நிதியுதவியில் ரூ.2 கோடியே 3.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பணிகளை தொடக்கி வைத்தார்.

    நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் ஞானவேலன், தஞ்சை மண்டல திமுக தகவல் தொழில் நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர்கள் அப்துல்மாலிக், பி.எம்.அன்பழகன், அமுர்த.விஜயகுமார், ஒப்பந்ததாரர் பழனிவேல், டெல்டா பாசனதாரர் சங்க தலைவர் கோபி கணேசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் பகவதி, லெனின் மேசாக் உள்ளிட்ட திமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×